தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பாக 2 யுனிட் இரத்தம் வழங்கப்பட்டது
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
14-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பாக 2 யுனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் கணகமனி கிளினிக்கில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப் பட்டிருந்த கீழக்கரையைச் சேர்ந்த சகோதரிக்கு A+ வகை இரத்தம் இரண்டு யுனிட் தேவைப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட தலைமையிலிருந்து தகவல் தரப்பட்டு நமதூரைச் சேர்ந்த சகோதரர் அப்துல்லாஹ் மற்றும் அர்சத் அலி ஆகியோர் உடனடியாகச் சென்று இரத்தம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.....