அமெரிக்காவின் கடன் பிரச்சனை: வரிகளை அதிகரிக்க ஒபாமா அரசு முடிவு
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்து விட்டது. இதனால் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் தனது பதவிக்கும் ஆபத்து வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது 3 லட்சம் கோடி டொலர் புதிய கடன் உச்ச வரம்பிற்கு குடியரசு கட்சியினரும் ஒபாமாவின் டெமாக்ரடிக் கட்சியினரும் ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
வாஷிங்டனின் இந்த அறிவிப்பால் உலக பங்கு சந்தை விறுவிறுப்பு அடைந்து உள்ளது. கிறீஸ் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண ஐரோப்பிய தலைவர்கள் உத்தேச ஒப்புதல் முடிவு எடுத்த நிலையில் பங்கு சந்தை வேகம் பிடித்தது.
தற்போது அமெரிக்க அரசும் கடன் உச்ச வரம்பை அதிகரித்து உள்ளதால் வருகிற நாட்களில் முதலீட்டாளர்கள் கூடுதல் லாபத்தை எதிர்நோக்கலாம். ஆகஸ்ட் மாதம் 2ம் திகதிக்குள் அமெரிக்க கடன் உச்ச வரம்பான 14.3 லட்சம் கோடி டொலர் கடன் உச்ச வரம்பை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.
அப்படி செய்யாத பட்சத்தில் ஒபாமா அரசால் எந்த பணிகளுக்கும் நிதி தர முடியாத நிலை ஏற்படும் என்ற அபாயமும் இருந்தது. வருவாயை அதிகரிக்க வரியை கூட்டவும், செலவினத்தை குறைக்கவும் ஒபாமா அரசு முடிவு செய்தது. வரி உயர்வுக்கு குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
newsonews.com