இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சத்தீஸ்கர் மாநிலம், ராமகிருஷ்ண மடத்தின் நாராயண்பூர் கிளைக்கும் 2009ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட உள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு சிறப்பான பங்காற்றியவர்களை கெளரவிப்பதற்காக கட்சியின் நூற்றாண்டில் (1985) இந்த விருதை காங்கிரஸ் கட்சி நிறுவியது.
இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த விருதை வழங்குவார். பாராட்டுப் பத்திரமும், ரூ.2.5 லட்சமும் இந்த விருதில் அடங்கும்.
ராஜீவ் காந்தி (மறைந்த பின்), பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பியாந்த் சிங், குடியரசு முன்னாள் தலைவர்கள் அப்துல் கலாம், சங்கர் தயாள் சர்மா, திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
Webdunia