ஏர்-இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்குத் தேவையான எரி பொருளை இந்திய எண்ணை நிறுவனங்களி டம் இருந்து பெற்று வந்தது. இந்த வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் 2700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய துள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஏற்கனவே பெட் ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை குறைந்த விலைக்கு கொடுப்பதால் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே பாக்கி வைத்துள்ள ரூ.2700 கோடி நிலுவைத் தொகையை கொடுத்தால் தான் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை தர முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் திட்ட வட்டமாக அறிவித்தன.