ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி: ஒபாமா அதிர்ச்சி

07/08/2011 19:57

ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார்டாக் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் கூடியிருப்பதாக கூட்டுப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சந்தேகத்துக்கு இடமான வீட்டை நோட்டமிட்டனர்.

 

அப்போது தீவிரவாதிகள் திடீரென ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் அமெரிக்க வீரர்கள் 31 பேர், ஆப்கன் கமாண்டோக்கள் 7 பேர் பலியாயினர்.

 

இவர்களில் 20 பேர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற குழுவில் இருந்தவர்கள். இத்தகவல் அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செய்து வரும் அதீத தியாகத்தையே இந்த சம்பவம் மீண்டும் நமக்கு நினைவுப்படுத்துகிறது.

 

தாக்குதலில் பலியான அமெரிக்க, ஆப்கன் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

இதேபோல் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாயும் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆப்கனில் கடந்த 2001 முதல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.

 

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தாக்குதலில் 38 பேர் ஒரே நேரத்தில் நேரத்தில் பலியானது இதுவே முதல்முறையாகும்.

newsonews.com