காஷ்மிர் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற இந்திய இராணுவம்

22/09/2010 12:25

காஷ்மிர் போராட்டம் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது எரிகிற நெருப்பின் எண்ணெய் ஊற்றியது போல இணையத்தில் வெளியான ஒரு காணொளியால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காசுமிரில் இந்திய துணைராணுவம், மத்திய ரிஸர்வ் காவல்படை மற்றும் காசுமிர் காவல்துறைகளால் காசுமிரிகளுக்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காஷ்மிர் இந்தியாவின் ஈழம், அல்லது பாலஸ்தீன் என்று கூறும் அளவுக்கு உச்சமடைந்துள்ளன. 

இராணுவமோ அல்லது காவல்துறையோ தமது கைதிகளை நடத்தும் விதம் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், அவை காணொளியாகவோ, அல்லது புகைப்படங்களாகவோ வெளிப்படுகையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஈராக்கில் அமெரிக்க, இங்கிலாந்து இராணுவத்தின் போர்க்குற்றங்கள், பால்ஸ்தீனில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள், ஈழத்தில் சிங்கள பேரினவெறி இராணுவத்தின் போர்க்குற்றங்கள் போன்றவை உதாரணங்கள். இதில் சில குற்றமிழைத்தவர்களே பெண்களை வன்புணர்ச்சி செய்யும்போதோ அல்லது ஆண்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும்போதோ இரசித்து அதை புகைப்படமாக எடுத்து அவை பின்பு ஊடகங்களில் வெளிவரும்போது அவர்களின் அருவருப்பூட்டும் வக்கிரம் வெளிப்படுகிறது. 

தம்மிடம் சிக்கிய கைதிகளை எந்தவித மனித உரிமையுமின்றி நடத்துவதில் இராணுவமோ அல்லது காவல்துறையோ விதிவிலக்கல்ல. அதுவும் காஷ்மிர் போன்ற போராட்டம் நடக்கும் பகுதிகளில் இராணுவத்திற்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இடங்களில் நடக்கும் அவலங்களை சொல்லி மாளாது. தீவிரவாதிகள், போராட்டக்காரகள் மீதான் கோபத்தினை பொதுமக்கள் மீதும் கைதிகள் மீதும் காட்டுவது இவர்களின் வாடிக்கை. பெண்களாக் இருந்தால் பாவாடையைக் கிழிக்க அலையும் ஆக்ரமிப்பு இராணுவங்கள், ஆண்கள் மீதும் பல்வேறு வகையான சித்ரவதைகளை ஏவுகின்றன. நிர்வாணப்படுத்துவது அதில் மிக முக்கியமானது. அதற்கு எந்த இராணுவமும் விதிவிலக்கல்ல. இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

தற்போது வெளிப்பட்டுள்ள காணொளியில்  நான்கு காஷ்மிர் இளைஞர்கள் நிர்வாணமாக் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் தமது உடைகளைக் கைகளில் வைத்துள்ளனர். காவலர்கள் அவர்களைக் கைகளை மேலே உயர்த்தியவாறு நடக்குமாறு கட்டளையிட்டு அவரகள் கைகளால் தமது ஆணுறுப்பை மறைக்காதவாறு செய்கிறார். மூன்று நிமிடங்கள் வரை ஓடும் இக்காட்சியில் சுற்றியிருக்கும் பெண்கள் அழுவதும் இடம் பெற்றுள்ளது. இதை இளைஞர்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லும் இராணுவ வீரரே படம் பிடித்துள்ளார்.  

இக்காட்சி யூட்யூப், ஃபேஸ்புக்கில் 8 - ம் தேதி இரவு முதல் 9 - ம் தேதிவரையில் காணப்பட்டது. தற்போது நீக்கப்பட்டு விட்டது. "சகோதரர்களே தயவுசெய்து பாருங்கள், சகோதரிகளே தயவுசெய்து பார்க்காதீர்கள்" என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தது. இது பல இந்தியதேச பக்தரகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காஷ்மீரில் கலவரக்காரர்களின் வன்முறைகள், கல்லெறிதல், தீவைப்புகள் போன்றவையே செய்திகளாக இந்திய ஊடகங்கள் வெளியிடுவதால் இராணுவத்தின் வெறியாட்டங்கள் மறைக்கப்படுகின்றன.  

தெளிவற்ற காட்சியாகவே ஓடும் இது எடுக்கப்பட்ட இடமும், காலமும் சரியாக அறியப்படவில்லை. எனினும் கடைசி 2 அல்லது 3 வருடங்களில் எடுக்கபபட்டதாகவே தெரிகிறது. காஷ்மிர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் இதை வெளியிட்ட யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இதைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றிருக்கிறார். ப. சிதம்பரமோ இதன் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பியுள்ளார். இது இந்திய இராணுவத்தை இழிவு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் காணொளியில் காவலர், இராணுவத்தினரின் சீருடை தெளிவாகத் தெரிகிறது என்றும் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதைப்படம் பிடித்தவர் ஹிந்தியில் பேசுவதும் பதிவாகியுள்ளது. நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்களின் முகம் அவமானத்தாலும், வேதனையினாலும் நிரம்பி இருந்தது. காவலரின் குரல் பின்வருமாறி ஒலிக்கிறது.

"நட, நட, நட  நடந்துகொண்டே இரு, sisterfuckers"

"கைகளைத் தூக்கு, இல்லையென்றால் அடிப்பேன்"

"உன்னுடைய காலணிகள் மிகவும் நன்றாக உள்ளன, sisterfuckers" ( பின்பு வேறொரு குரல் கேட்கிறது - ஏன் உன் காலணிகள் மிகவும் அழுக்காக உள்ளன)

 

"உங்கள் உடைகளை மடித்து, கைகளில் எடுத்து, மேலே தூக்குங்கள்" ( கைகளால் உடலை மறைக்காமல் இருக்க)

"இந்த sisterfuckers காலையிலிருந்து நம்மை இவனுங்க பின்னால் ஓட வைத்து விட்டார்கள்"

"இவர்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்"

இதன் மூலம் இந்திய இராணுவத்தின் கோரமுகம் மீண்டும் அம் பலமாகியிருக்கிறது.

https://thamizvinai.blogspot.com/2010/09/blog-post_11.html