குஜராத்தில் பெண் எம்.பி யை அவமானப்படுத்திய மோடி!!

23/05/2011 16:58

குஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் விவசாயிகளுக்கான அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் குஜராத் இனபடுகொலை முதல்வர் நரேந்திரமோடி அழைக்கப்பட்டிருந்தார். உடன் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ரஜோலி உள்ளிட்ட காங்கிரஸ் நிருவாகிகள் கலந்து கொள்ள வந்தனர்.

பாதுகாப்பு என்று பொய் காரணம் சொல்லி விழா மேடையில் காங்கிரஸ் எம்.பி.க்கும் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. அரசு விழாவில் கலந்து கொள்ள சட்டமன்ற உறுப்பினர் ரஜோலிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரஜோலி தலைமையில் பயங்கரவாதி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடன் அவர்களை மோடியின் பயங்கரவாத காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து மேடையில் இருந்த காங்கிரஸ் பெண் எம்.பி. பிரபாபென் தவியாத், முதல்வர் நரேந்திரமோடியின் அருகில் சென்று ஏன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுங்கள் என மோடியை கேட்டுள்ளார்.
இதனை கவனித்த மோடியின் பயங்கரவாத காவல்துறையை சேர்ந்த பெண் காவல்துறையினர் எம்.பி.யை கட்டாயப்படுத்தி மேடையைவிட்டு கீழே இறக்கிவிட்டனர்.

பயங்கரவாதி மோடியும் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்துள்ளார். இது குறித்து காங். எம்.பி. கூறுகையில், நடப்பது அரசு விழா, அரசின் செலவில்தான் நடத்தப்படுகிறது. பா.ஜ.க. கட்சியினர் கொண்டாடும் விழா அல்ல. பொது விழாவில் எந்தக் கட்சியினரும் கலந்து கொள்ளலாம். என்றார்.

குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜூன் மோஹோத்வாடியா கூறுகையில், எம்.பி.யை அவமானப்படுத்திய மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றார்

 

சிந்திக்கவும்.நெட்