சீனாவில் ஆண்டுக்கு 2 மில்லியன் தற்கொலைகள் - ஆய்வில் தகவல்

13/09/2011 22:56

சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

அதிக அளவு தற்கொலையில் ஈடுபடுவோர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டோர்தான் என்கிறது இந்த அறிக்கை.

75 சதவீத தற்கொலைகள் கிராமங்களில் நடப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இன்று செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேட்ஸ்தமிழ்