தவ்ஹீத் பள்ளிக்கு புதிய இடம் வாங்கப்பட்டுள்ளது
20-7-2010
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக காயிதேமில்லத் நகரில் 5 செண்டு இடம் வாங்கப்பட்டது தற்க்காலிகமாக அங்கு தொழுகையும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் குவைத் நாட்டை சேர்ந்த ஒரு சகோதரர் பள்ளிக்கட்டி தருவதாகவும் அனால் இடம் பத்தாது வேறு பெரிய இடம் வாங்குங்கள் என்று சொல்லி 2000 கேடி (இந்திய ரூபாயின் மதிப்பு ருபாய் 3 லட்சங்களுக்க் சற்று அதிகம்) வழங்கினார் அனால் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. அல்லாஹ்வுடைய உதவியால் உமர் ஊரணிக்கு வடக்கே 10 செண்டு இடம் வாங்கப்பட்டு உள்ளது.