துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை அனீஸா சையத்

06/10/2010 14:50

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் இன்று தங்கப் பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 8-ஆக உய்ர்ந்திருக்கிறது. 

இன்று காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலி்ம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில், இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும், 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர்.  இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 8- ஆக உயர்ந்திருக்கிறது.

தினமணி