தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் சலுகை காட்ட முடியாது-அமெரிக்கா

26/05/2011 17:30

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றுபவர் தேபாசிஸ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா(18). நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் பள்ளியில் படிக்கிறார். ஆசிரியர்களுக்கு ஆபாச இ&மெயில் அனுப்பியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரது கையில் விலங்கை மாட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். 24 மணி நேரத்துக்கு மேலாக அவரை லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.

 

தூதரின் மகள் என எடுத்துக் கூறியும் போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. கெடுபிடியாக விசாரணை நடத்தினர். கிருத்திகாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பிரின்ஸ்பால் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியர்க ளுக்கு ஆபாச இ-மெயில் அனுப்பியது வேறு நபர் என கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கிருத்திகா மீதான வழக்குகள் விலக்கி கொள்ளப்பட்டன. தவறுதலாக கைது செய்ததற்காக நியூயார்க் நிர்வாகம் 1.5 மில்லியன் டாலர் (ரூ.6 கோடியே 75 லட்சம்) நஷ்டஈடு தர வேண்டும் என கிருத்திகா தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். தினகரன்.காம்

 

அதைத் தொடர்ந்து பதிலளித்துள்ள அமெரிக்கா

 

தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் சலுகை காட்ட முடியாது-அமெரிக்கா

வாஷிங்டன் தூதரக அதிகாரிகளுக்கு மட்டும்தான் தூதரக சலுகை தர முடியும். அவர்களது குடும்பத்தினர்களுக்கெல்லாம் தர முடியாது. அப்படி ஒரு விதிமுறையே இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருக்கும் தேபஷிஸ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவரை சமீபத்தில் அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்தனர். அவர் படித்து வரும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஆபாச இமெயில் வந்தது. அதை அனுப்பியவர் கிருத்திகாதான் என்று கூறி பள்ளி நிர்வாகம் அவரை நீக்கியது. அதைத் தொடர்ந்து கிருத்திகா கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர்தான் அவரை விடுவித்தனர். மேலும் தவறு செய்தது கிருத்திகா இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் பள்ளியில் சேருமாறு நிர்வாகம் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்தி, கைது செய்ததற்காக நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ரூ. 7.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இது அமெரிக்காவை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், அமெரிக்க போலீஸாரின் மனிதாபிமானற்ற செயலையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கிருத்திகா கூறுகையில், நான் கைது செய்யப்பட்டு நீண்ட நேரமாகியும் என்னை கழிப்பறைக்குக் கூட செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்தே என்னை அனுமதித்தனர். அதுவும், பல கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல பணித்தனர். இதனால் அத்தனை பேர் முன்னிலையிலும் நான் கழிப்பறையை பயன்படுத்த நேரிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையே, கிருத்திகாவுக்கு தூதரக சலுகையை அமெரிக்க நிர்வாகம் தரவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்,

தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே சலுகைகள் செல்லும். அவர்களின் குடும்பத்தினருக்கு அது கிடையாது.

தூதரக அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை, விசாரணை போன்றவற்றை எடுக்கக் கூடாது என்று வியன்னா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. அதேசமயம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்பதையும் வியன்னா மாநாட்டுத் தீர்மானம் தெளிவாக குறிப்பிடுகிறது.

தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் தூதரக பாஸ்போர்ட் இருந்தாலும் கூட அவர்களுக்கு சலுகைகள் கிடையாது என்றார் அவர். thatstamil.com