மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பிடி ஆணை

14/06/2011 10:15

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

 

 அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

 

 எனவே, அவர்களுக்கு எதிராகப் பிடி ஆணைப் பிறப்பித்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்

 

dinamani.com 

https://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=431388&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு  எதிராக பிடி ஆணை