TNTJ புதுவலசை நிர்வாக சீரமைப்பு

20/07/2011 22:06

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இன்று 20-07-2011 அன்று புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகச் சீர் திருத்தக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் பனைக்குளம் கமருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுநாள் வரை கிளைச் செயலாளராக இருந்த சகோதரர் ஜாஹிர் அலி அவர்கள் கிளைத் தலைவராகவும் துணைச் செயலாளராக இருந்த சகோதரர் முஹம்மது சமீனுல்லா அவர்கள் கிளை செயலாளராகவும், சகோதரர் அர்சத் அலி அவர்கள் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். சகோதரர் அஹமது பசீர் அவர்கள் தொடர்ந்து கிளைப் பொருளாளராக பணியாற்றுவார்.

 

அதைத் தொடர்ந்து கிளை செயல்பாடுகள் குறித்து சகோதரர் அப்துல் ஹலீம் துயைில் இருந்து அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டு அது சம்மந்தமான பல ஆலோசனை செய்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி ரமளானை வரவேற்கும் விதமாக ஒரு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்வது எனவும்

பெண்களுக்கு இவ்வருட ரமளான் இரவுத் தொழுகைக்கு ஏகத்துவமையத்தில் ஏற்பாடு செய்வதாகவும்

கிளை நிர்வாக வரவு செலவுகளுக்காக தனியாக ஒரு பேங்கில் கணக்கு துவக்குவது எனவும்

பிரச்சரத்தை மேலும் திரம்படச் செய்ய ஒரு ஆம்லிபயர் வாங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்....