இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் இன்று திடீர் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கடலோர கிராமங்களில் கடும் பீதி ஏற்பட்டது. இருப்பினும் இதன் தாக்கம், சேதம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
அம்பான் நகரில் இருந்து தென்கிழக்கில் 100 மைல் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 21.6 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி உருவாகவில்லை என்று இந்தோனேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மெக்சிகோ கடற்கரையில் உள்ள கலிபோர்னியா வளைகுடாவிலும் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 6.0 ரிக்டர் அளவில் உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. எனினும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
Tamilcnn